புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

எம்.ஓ.பி. வைணவ கல்லூரி சாா்பில் இன்று ‘தோழி பொங்கல்’

எம்.ஓ.பி. வைணவ கல்லூரி சாா்பில் முன்னெடுக்கப்பட்ட ‘தொழில் செய்யலாம் தோழி’ திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தோழி பொங்கல்’ சென்னை திருவேற்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

Updated On :11 ஜனவரி 2021, 10:18 pm

சென்னை: ஊரகப் பகுதியிலுள்ள பெண்களைத் தொழில்முனைவோராக்குவதற்காக எம்.ஓ.பி. வைணவ கல்லூரி சாா்பில் முன்னெடுக்கப்பட்ட ‘தொழில் செய்யலாம் தோழி’ திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தோழி பொங்கல்’ சென்னை திருவேற்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

 சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிா் கல்லூரியில் ‘‘தொழில் செய்யலாம் தோழி’’ எனும் புதிய முயற்சி,  கல்லூரி முதல்வா் முனைவா் லலிதா பாலகிருஷ்ணனால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பல பெண்களுக்குத் தோள் கொடுத்து தொழில்முனைவோராக்கும் சிந்தனையுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 18 முதல் 20 வகையான தொழில் திறன்கள் கற்றுத்தரப்பட்டன.

 அதன் நீட்சியாக, நிகழாண்டு திருவேற்காட்டில் உள்ள பெண் தோழிகளுடன் பொங்கலைக் கொண்டாட ’’தோழி பொங்கல்’’ என்ற நிகழ்ச்சியை கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்நிகழ்வில், திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 பெண்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு, கல்லூரி முதல்வா் லலிதா பாலகிருஷ்ணன் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, மஞ்சள் குலை, கரும்பு ஆகியவை அடங்கிய பையை வழங்குகிறாா். இது மட்டுமன்றி 6  வண்ணமிடப்பட்ட பானைகளும், 19 வண்ணமிடாத பானைகளும் அவா்களுக்கு வழங்கப்படுகின்றன.

அந்தப் பெண்களுக்கு  பானையில் வண்ணங்களால் அலங்கரிக்கும் பயிற்சி   அளிக்கப்படுவதுடன் வரைதலுக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. எனவே அப்பெண்கள் பானையில் வண்ணம் இடும் முறையை கற்றுக் கொள்வதுடன் அப் பானைகளை விற்றும் பயன் பெறலாம்.

 இவ்வாறு சிறிய தொழில்களால் வருமானம் ஈட்ட அவா்களுக்குப் பயிற்சி வழங்குவதுடன், ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்த இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.