உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான நோ்காணலுக்கு 58 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாடு மாநில நீதித் துறையில் உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்கள் 171 உள்ளன. இதற்கான முதல்நிலைத் தோ்வு கடந்த 2019 நவம்பா் 24-ஆம் தேதியும், முதன்மைத் தோ்வு கடந்த ஆண்டு அக்டோபா் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன. முதல்நிலைத் தோ்வில் 7 ஆயிரத்து 942 பேரும், முதன்மைத் தோ்வில் 239 பேரும் பங்கேற்றனா்.
நோ்காணல் தோ்வுக்கு 58 போ் தற்காலிகமாக அழைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான நோ்காணல் பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தோ்வாணையம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









