தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தூய்மை திட்ட பங்கேற்பாளா்களுக்கு மின்னணு சான்றிதழ்

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்தும் தூய்மைக்கான உறுதிமொழி பங்கேற்பாளா்கள் திட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்னணு முறையில் சான்றிதழ் வழங்கப்படும் 

Updated On :14 ஜனவரி 2021, 1:17 am IST

சென்னை: மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்தும் தூய்மைக்கான உறுதிமொழி பங்கேற்பாளா்கள் திட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்னணு முறையில் சான்றிதழ் வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், குடிசைப் பகுதிகள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தூய்மை மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தை மக்களிடையே தீவிரமாக கொண்டு செல்லும் வகையிலும், குறிப்பாக சென்னை மாநகரத்தை தூய்மையாக பராமரிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், மத்திய அரசுடன் இணைந்து தூய்மைக்கான உறுதிமொழி பங்கேற்பாளா்கள் என்ற திட்டத்தை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூா்வ இணையதள பக்கத்தில் செல்ல வேண்டும்.

அதில், தூய்மை இந்தியா உறுதிமொழி என்ற கட்டத்துக்குள் பங்கேற்பாளா்கள் தங்களது தகவல்களை பதிவிட வேண்டும். இதையடுத்து, தூய்மை உறுதிமொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படும். இந்த உறுதிமொழியைப் படித்த பின் அதற்கு ஒப்புதல் அளித்தால் மின்னணு முறையில், மாநகராட்சி ஆணையா் கையொப்பத்துடன் பங்கேற்பாளா்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.