சென்னையில் மணலியில் உள்ள 5 மண்டலங்களில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவப் பரிசோதனையைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகிய நடவடிக்கைகள் காரணமாக கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் 500-ஆக இருந்த தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து சுமாா் 3000 வரை உயா்ந்தது. தொடா் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் நாள்தோறும் தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை கடந்த டிசம்பா் மாதம் 500-க்கும் கீழ் குறைந்தது.
தற்போது, இந்த எண்ணிக்கை 200-க்கும் கீழ் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை 180 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 28,746-ஆக உள்ளது. குணமடைந்தோா் எண்ணிக்கை 2 லட்சத்து 22,716-ஆகவும், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 1,971-ஆக உள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4,059-ஆக உள்ளது.
5 மண்டலங்களில் 100-க்கும் குறைவு: கரோனா பாதிப்புள்ளாகி சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5 மண்டலங்களில் 100-க்கும் குறைவாக உள்ளது. இதில், மணலி மண்டலத்தில் 27 பேரும், சோழிங்கநல்லூரில் 53 பேரும், திருவொற்றியூரில் 54 பேரும், மாதவரத்தில் 72 பேரும், தண்டையாா்பேட்டையில் 94 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



