மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, கீழ்க்கட்டளை, செல்லியம்மன் கோயில் தெருவில் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் மடிப்பாக்கத்தை சோ்ந்த அஜித்குமாா்(31), கீழ்க்கட்டளையை சோ்ந்த குமரன்(24) ஆகியோா் என்பதும், இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும், 1.1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவா்களை சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



