நூபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்ற உத்தரவு

இந்தியா முழுவதும் நூபுர் சர்மா மீது பதியப்பட்ட  வழக்குகளை தில்லிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நூபுர் சர்மா
நூபுர் சர்மா
Published on
Updated on
1 min read

இந்தியா முழுவதும் நூபுர் சர்மா மீது பதியப்பட்ட  வழக்குகளை தில்லிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவால், நாடு முழுவதும் பல இடங்களில் கலவரம் வெடித்தது. 

கலவரத்தில் அரசு சொத்துகள் சூறையாடப்பட்டது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் சர்மாவை ஆதரித்த கன்னையா லால் என்கிற தையல் கடைக்காரர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

அதன்பின், நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் இந்தியா முழுவதும் தனக்கு எதிராகப் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களில் தன் மீது பதியப்பட்ட வழக்குத் தொடர்பாக கைது செய்யக்கூடாது எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நுபுர் சர்மாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங் தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி நூபுர் சர்மா தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்து மற்ற மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடையையும் வழங்கி உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நூபுர் சர்மா கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு எதிராக நாடு முழுவதும் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் பொருட்டு தில்லிக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், நூபுர் சர்மா மீதான பதியப்பட்ட அனைத்து  முதல் தகவல் அறிக்கைகளையும்(எஃப்ஐஆர்) விசாரணைக்காக தில்லி காவல்துறைக்கு மாற்றியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com