25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி?

நடிகர் சிவகார்த்திகேயன்- இயக்குநர் மடோன்னே அஸ்வின் கூட்டணியில் உருவாகும் படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 3:19 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன்- இயக்குநர் மடோன்னே அஸ்வின் கூட்டணியில் உருவாகும் படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த ‘டான்’ படத்திற்குப் பின் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

அனுதீப் இயக்கத்தில் உருவான அவருடைய அடுத்த படமான ’பிரின்ஸ்’ திரைப்படமும் இந்த வருட தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன்னே அஸ்வின்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாவீரன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு மேடையில் சிவ கார்த்திகேயன் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க வேண்டுமென ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். 

இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு  வெளியாகும் என தகவல் சொல்லப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.