ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிருந்தா மாஸ்டர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 3:26 pm IST

பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநர் பிருந்தா இரண்டாம் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அப்படத்தின் பெயர் தக்ஸ் (Thugs).

சந்தோஷ் சிவனின் ஹிந்தி திரைப்படமான ‘மும்பைக்கர்’ திரைப்படத்தில் நடித்த ரிது ஹரோன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி, விக்ரந்த் மாஸ்ஸே மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவும் தயாரிப்பாளர் நடிகருமான ஆர்.கே. சுரேஷும் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரவீன் ஆண்டனி எடிட்டிங். ஒரே ஷெட்டியூலில் எடுக்கப்பட்ட படமாகும். இதில் முனிஷ்காந்த முக்கியமான வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இரண்டு சண்டைப் பயிற்சியாளர்கள் இதில் பணிபுரிந்துள்ளனர். 

கன்னியாகுமரி, நாகர்கோவில், கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.