1940இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘தி மெட்ராஸ் மர்டர்’ என்ற இணையத் தொடர் பற்றிய தகவலை சோனி லைவ் ஓடிடி தளம் அறிவித்துள்ளது.
இயக்குநர் விஜய், சூர்யபிரதாப் ஆகியோர் இந்த தொடரை இணைந்து எழுதி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் மூலம் ஐபி கார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் சம்மந்தப்பட்ட அவதூறுகளை எழுதியதற்காக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி எடுக்கப்பட்ட தொடர் என தகவல் சொல்லப்படுகிறது.
இந்த தொடரில் நடித்த நடிகர்கள் பற்றி படக்குழுவினர் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. விரைவில் தெரிவிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதைக்குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறியதாவது:
மிகவும் முக்கியமான பெரிய தொடரான ‘தி மெட்ராஸ் மர்டர்” படத்தில் நன் பங்குபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது சென்னை மாகாணத்தில் 1940இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. சுதந்திரந்திற்கு முந்தைய சென்னையை மக்களுக்கு டிஜிட்டல் முறையில் நல்ல அனுபவத்தை தரும் வகையில் காட்டுவதற்காக எங்களது படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

அம்பை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

அதிமுக வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



