அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மனி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்த்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: 6 நாள்களில் ரூ. 1000 கோடி! புஷ்பா - 2 சாதனை!
இந்த நிலையில், தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதில் தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் நிவார நிதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மணி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர். அதில் அந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்த்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: 6 நாள்களில் ரூ. 1000 கோடி! புஷ்பா - 2 சாதனை!
இந்த நிலையில், தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதில் தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் நிவார நிதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து
அட்லி - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர்!

பூவை ஜெகன்மூா்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஆதவ் அா்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்த தீா்ப்பை திரும்பப் பெறக் கோரி மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


