எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

புஷ்பா 2: நெரிசலில் பெண் பலி! தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு தாக்கல்

தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:54 pm IST

அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மனி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்த்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதில் தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் நிவார நிதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மணி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர். அதில் அந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்த்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதில் தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் நிவார நிதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.