மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்! நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்

அனைவரும் இரக்கத்துடன் இருக்க வேண்டும் - பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்

News image
பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் - படம் | அஜித் குமார் - @SureshChandraa
Updated On :29 ஏப்ரல் 2025, 3:32 am

DIN

அனைவரும் இரக்கத்துடன் இருக்க வேண்டும் என்று பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புது தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அஜித் அளித்துள்ள பேட்டியில், பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அஜித் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ‘அரசு தங்களால் இயன்றவரை சிறப்பாக செயல்படுகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர்களுடன் நான் துணை நிற்கிறேன். இதுபோன்ற செயல்கள் இனிமேல் நிகழாது என்று நம்புகிறேன். ஒரு நாள் நாம் ஒருவருக்கொருவரை புரிந்துகொண்டு இரக்கத்துடன் நடந்து கொள்வோம் என்பதற்காக பிரார்த்திப்போம். நம்மிடையே உள்ள அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையான, ஒரே சமூகமாக வாழ்வோம்” என்று பேசியுள்ளார்.

”ராணுவத்தைச் சேர்ந்த பலரை இன்று(ஏப். 28) சந்தித்தேன். நாம் அவர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாம் இங்கே நிம்மதியாக உறங்கி ஓய்வெடுக்க, அவர்கள் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் அழகானதொரு வாழ்க்கை அமைய பிரார்த்திக்கிறேன், வாழ்த்துகிறேன்.

எல்லைகளில் ஓய்வின்றி அவர்கள் சேவையாற்றுகிறார்கள். இதற்காகவே, அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக, நாம் நமது தேசத்துக்குள், இங்கே ஒருவருக்கொருவரை மதித்து நடந்து கொள்வதும், ஒவ்வொரு மதத்தையும் மதிப்பதும், அதேபோல ஒவ்வொரு சாதிக்கும் மதிப்பளிப்பதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், அமைதியானதொரு சமூகமாக திகழ வேண்டும்” என்று பேசியுள்ளார்.

முன்னதாக, புது தில்லியில் திங்கள்கிழமை(ஏப். 28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.