

சமீபத்திய படங்கள் அளித்த வெற்றியில், மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளார் நயன்தாரா.
மிஸ்கினின் உதவி இயக்குநர் பரத் கிருஷ்ணாமாச்சாரி, இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். நயன்தாரா சமீபத்தில் ஒப்புக்கொண்ட படங்கள்போல இதுவும் கதாநாயகியை மையமாகக் கொண்ட படமாகும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளராக இதில் நடிக்கிறார் நயன்தாரா. இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வெளிநாடுகளில் படமாக்கப்படுகின்றன. ஈராஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படம் அடுத்த மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
நயன்தாரா தற்போது டோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் மற்றும் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படம் என ஐந்து படங்களில் நடித்துவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.