பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பெண் பத்திரிகையாளர் குறித்து ஆபாச கருத்து: இரு ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு!

பத்திரிகையாளரான தன்யா ராஜேந்திரன், விஜய் நடித்த சுறா படம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார்...

News image
Updated On :9 ஆகஸ்ட் 2017, 12:23 pm

எழில்

பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அவரைப் பற்றி ஆபாசமாக ட்வீட் செய்த இரு ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளரான தன்யா ராஜேந்திரன், விஜய் நடித்த சுறா படம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார். விஜய் நடித்த சுறா படத்தை இடைவேளை வரை பார்த்து பிறகு வெளியேறிவிட்டேன். ஆனால் ஜப் ஹாரி மெட் சேஜல் படத்தை இடைவேளை வரைக்கும் கூட பார்க்கமுடியவில்லை என்று ட்வீட் செய்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து பலர் தன்யாவுக்கு எதிராக ட்வீட்களை வெளியிட்டார்கள்.

ஆனால் அவ்வகையான ட்வீட்கள்  மோசமாகவும் ஆபாசமான முறையிலும் இருந்தன. இதனால் தன்னுடைய ட்வீட்டை தன்யா பிறகு நீக்கிவிட்டார். ஆனாலும் மோசமான வார்த்தைகளைக் கொண்ட ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தன்யாவுக்கு எதிரான ஆபாசமான ட்வீட்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. 

இதையடுத்து அதுபோன்று ட்வீட் செய்தவர்களுக்குக் கண்டனம் தெரிவித்தும் தன்யாவுக்கு ஆதரவாகவும் பலர் ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் நடிகர் விஜய், தனது ரசிகர்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் தன்யா. தன்னை ஆபாசமாக விமரிசனம் செய்த ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். தன்யா அளித்த புகாரின் பேரில் இரு ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.