பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற காரணத்துக்காக அதன் முன்னாள் போட்டியாளர் நடிகை ஓவியாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் நிஜ வாழ்வை பிரதிபலிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகர் கமல்ஹாசன் உள்ளார்.
இதில், நடிகை ஓவியா சக போட்டியாளரான ஆரவ் என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். ஆனால், ஆரவ் அதை மறுத்துள்ளார். இந்நிலையில், அந்த அரங்கில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதன்காரணமாக, நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பூந்தமல்லி காவல்நிலைத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விரைவில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நடிகை ஓவியாவுக்கு பூந்தமல்லி போலீஸார் சம்மன் அனுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


