எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம்: இயக்குநர் சேரன் அறைகூவல்! 

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து  விலகும் வரை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 டிசம்பர் 2017, 12:53 pm

DIN

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து  விலகும் வரை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி  மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட நடிகர் விஷாலும் இன்று மனுதாக்கல் செய்தார். அதே சமயம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சேரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

விஷால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர் சங்கம் பாதிக்கப்படும். அவர் வேண்டுமானால் ராஜிநாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும். அவர் ராஜிநாமா செய்யும் வரை எங்களின் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்.இதில் மேலும் தயரிப்பாளர்கள் சேர்ந்து கொள்வார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான இந்த 8 மாதத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அவர் தேர்தலில் நிற்பதில் மூலம் அரசுக்கு எதிராக இருப்பது போலாகி விடும். அத்துடன் அரசியல்வாதிகள் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். 

எனவே அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லா விட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனது இயலாமையையும் கருத்தில் கொண்டு விஷால் தயாரிப்பாளர்கள் சங்க பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு சேரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.