பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

கொடிவீரன் வெளியீட்டை முன்னிட்டு அசோக் குமாருக்கு சசிகுமார் அஞ்சலி!

படவெளியீட்டை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அசோக் குமாருக்கு சசிகுமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்...

News image
Updated On :7 டிசம்பர் 2017, 5:38 am

எழில்

முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா, விதார்த், பூர்ணா, பால சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் - கொடிவீரன். இசை - ரகுநந்தன். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. 

இந்தப் படம் நவம்பர் 30 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் சசிகுமாரின் உறவினர் அசோக் குமாரின் தற்கொலை மற்றும் பணப்பிரச்னை காரணமாக படம் குறித்த நேரத்தில் வெளியாவது தடைபட்டது. இதையடுத்து இன்று இப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படவெளியீட்டை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அசோக் குமாருக்கு சசிகுமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார், கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார், தனது இறப்புக்கு திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படைகள் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.