ரஜினி படத்துக்கு காலா எனப் பெயரிட்டது ஏன்? இயக்குநர் பா.இரஞ்சித் விளக்கம்!
தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலா - கரிகாலன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை இத்தகவல் வெளியிடப்பட்டது. காலா படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 28ம்தேதி தொடங்குகிறது.
இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
இத்தலைப்பு குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கூறியதாவது: கரிகாலன் என்கிற பெயரின் சுருக்கமே காலா. ரஜினிக்குப் பிடித்த பெயர் என்பதால் காலா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வட்டாரங்களில் எமனை, காலா சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையை சொல்வது காலா படம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

