வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

மாணவி அனிதாவின் நினைவாக அரியலூர் கல்வி வளர்ச்சிக்கு ரூ. 50 லட்சம் வழங்க விஜய் சேதுபதி முடிவு!

மாணவி அனிதாவின் நினைவாக அரியலூரின் கல்வி வளர்ச்சிக்கு ரூ. 50 லட்சம் வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்...

News image
Updated On :10 நவம்பர் 2017, 10:04 am

எழில்

மாணவி அனிதாவின் நினைவாக அரியலூரின் கல்வி வளர்ச்சிக்கு ரூ. 50 லட்சம் வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, தனியார் விளம்பரத்தில் நடித்ததற்காகக் கிடைத்த தொகையில் ஒரு பகுதியை (கிட்டத்தட்ட ரூ. 50 லட்சம்) அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அங்கன்வாடிகள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகள், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்பில் சேர  முடியாமல் போனதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவியைச் செய்வதாக அவர் கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.