கலகலப்பு - 2 படத்திற்கான அறிவிப்பு வெளியானது!
பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ஆம் வெளியான கலகலப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சென்னை: பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ஆம் வெளியான கலகலப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கலகலப்பு. இந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா மற்றும் சந்தானம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தற்பொழுது `சங்கமித்ரா' என்னும் பிரமாண்ட வரலாற்றுப் படத்தை சுந்தர்.சி இயக்கவிருந்த நிலையில், நடிகை சுருதி ஹாசன் படத்தில் இருந்து வெளியேறியதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் `கலகலப்பு' படத்தின் அடுத்த பாகத்திற்கான கதையை சுந்தர்.சி எழுதியிருக்கிறார்.
அத்துடன் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகையர் தேர்வும் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளது. அதன்படி `கலகலப்பு-2' படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸே தயாரிக்கிறது. `கலகலப்பு-2' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது.
இந்த தகவல்களை இயக்குனர் சுந்தர்.சியின் மனைவியும் பிரபல நடிகையுமான நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...