12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை!

மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அமலா பால், ரமேஷ் கண்ணா, சூரி,

Published On :

மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அமலா பால், ரமேஷ் கண்ணா, சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை ஜானர் திரைப்படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் 2015-ம் ஆண்டு மம்மூட்டி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இது.  

Story image

ஒற்றைப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் இருவரும் நட்பாகி, எப்படி பெற்றோரைச் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ஒன்லைன் கதை. (குழந்தையும் தெய்வமும் படக் கதை நினைவிருக்கிறதா?).

Story image

இப்படத்தில் அமலாபாலின் மகளாக நைனிகா நடிக்கிறார். அரவிந்த்சாமியின் மகனாக நடிப்பதற்கு ஜெயம் ரவி மகன் ஆரவ்வைக் கேட்டனர். ஆனால், அவர் மறுக்கவே தற்போது மாஸ்டர் எம்.பி. ராகவன் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

Story image

நடிகை நிகிஷா படேல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைவன், நாரதன் போன்ற படங்களில் நிகிஷா நடித்துள்ளார். 

படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்துவரும் நிலையில், இப்படம் 2018 ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.