ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் காஜல் அகர்வாலின் மேலாளர் கைது!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சுமார் 12 பேருக்கு...

News image
Updated On :25 ஜூலை 2017, 10:19 am

DIN

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விலை உயர்ந்த போதைப் பொருள்களை மர்மநபர்கள் சிலர் விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஹைதராபாத் முழுவதும் அந்தத் துறையின் எஸ்ஐடி குழுவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஹைதராபாதில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள்களை விற்பனை செய்த இருவரை எஸ்ஐடி அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாடுகளிலிருந்து இந்தப் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருவதும், இதற்குப் பின்னணியில் தெலுங்கு திரையுலகினர் சிலர் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின்பேரில் அமெரிக்காவைச் சேர்ந்த டாண்டு அனீஷ் உள்ளிட்ட 15 பேரை எஸ்ஐடி அதிகாரிகள் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சுமார் 12 பேருக்கு எஸ்ஐடி சார்பில் அண்மையில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதனை ஏற்று, தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே. நாயுடு, நடிகர்கள் சுப்பா ராஜு, தருண் ஆகியோர் எஸ்ஐடி அதிகாரிகள் முன்பு கடந்த வாரம் தனித்தனியே ஆஜராகினர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தெலுங்கு நடிகர் நவ்தீபுக்கு எஸ்ஐடி அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். அதன்பேரில், ஹைதராபாதில் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அலுவலகத்தில் நடிகர் நவ்தீப் திங்கள்கிழமை ஆஜரானார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் சுமார் 3 மணிநேரம் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ஜோசப் என்கிற ரோணி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் இருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரபல நடிகையின் மேலாளர் ஒருவர் இந்த வழக்கில் கைதாகியிருப்பது தெலுங்குத் திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.