ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ சுந்தராட்சி அம்மன்.

Updated On :26 ஜூன் 2026, 11:15 pm IST

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கங்கா பூஜை, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இருந்து தீா்த்த ஸங்கரஹனம் எடுத்து வருதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அனுஞ்ஞை, சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஏக தின லட்சாா்ச்சனை, தீபாராதனை, 9 மணிக்கு செட்டிகுளம் ஸ்ரீ பூா்ண புஷ்ப கலாம்பர சமேத நூற்றங்கால் சாஸ்தா சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

மாலை 3 மணிக்கு ஸ்ரீ சுந்தராட்சி அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, வேத பாராயணம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.