சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

த்ரிஷா என்னுடன் நடிப்பாரா என்று யோசித்தேன்: விஜய் சேதுபதி

முதல்முறையாக விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் ஒன்றாக நடிப்பதாலும்...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:32 pm IST

விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடியாக நடிக்கும் படம் - 96. பூஜையுடன் நேற்று தொடங்கியது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பிரேம்குமார். இவர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். 

முதல்முறையாக விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் ஒன்றாக நடிப்பதாலும் 96 என்கிற வித்தியாசமான படத்தலைப்பினாலும் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து விஜய் சேதுபதி பேட்டியளித்ததாவது: 12-ம் வகுப்பில் ஏற்படும் காதல் பற்றிய படம்தான் இது. 1996 என்பது வருடத்தைக் குறிக்கும். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பாரா என்று எண்ணினேன். ஆனால் கதை கேட்டுவிட்டு அவர் நடிக்க சம்மதித்தார். 

இந்தப் படத்தில் பள்ளி மாணவனாக சில காட்சிகளில் வருவேன். ஒரு கதாபாத்திரத்தால் உண்டாகும் சவால் குறித்து நான் கவலைப்படமாட்டேன். கதைக்கு ஏற்றவாறு உழைப்பதே என் பணி. யாருக்கும் என்னை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றார். 

இந்தப் படம் தவிர விக்ரம் வேதா, கருப்பன், சீதகாதி போன்ற படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.