சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

அதிக வருவாய் ஈட்டும் இந்திய நடிகர் யார்? போர்ப்ஸ் தகவல்!

இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற இந்திய நடிகைகள்...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:32 pm IST

சர்வதேச அளவில் கடந்த ஓர் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிகை. அதில் மூன்று இந்திய நடிகர்கள் இடம்பிடித்துள்ளார்கள். 

இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளவர் ஷாருக் கான். சர்வதேச அளவில் 65-வது இடத்தைப் பிடித்துள்ள ஷாருக் கான் ரூ. 245  கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஜுன் 1, 2016 முதல் ஜுன் 1, 2017 வரையிலான வருவாய் கணக்கிடப்பட்டுள்ளது. படச் சம்பளம் மற்றும் விளம்பர வருவாய் என ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தின் கணக்கீடு இதுவாகும். ஜோகோவிச், டைகர் வுட்ஸ், ரியானா, பிரிட்னி ஸ்பியஸ் போன்ற பிரபலங்களை விடவும் அதிக வருவாய் ஈட்டியுள்ளார் ஷாருக் கான். 

இவரை விடவும் சிறிது குறைவாக அதாவது ரூ. 238 வருவாய் ஈட்டியுள்ள சல்மான் கான், இந்தப் பட்டியலில் 71-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரூ. 228 கோடியுடன் அக்‌ஷய் குமார் 80-வது இடத்தில் உள்ளார். 

இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற இந்திய நடிகைகள் யாரும் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.