குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அதிக வருவாய் ஈட்டும் இந்திய நடிகர் யார்? போர்ப்ஸ் தகவல்!

இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற இந்திய நடிகைகள்...

News image
Updated On :14 ஜூன் 2017, 4:08 pm IST

சர்வதேச அளவில் கடந்த ஓர் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிகை. அதில் மூன்று இந்திய நடிகர்கள் இடம்பிடித்துள்ளார்கள். 

இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளவர் ஷாருக் கான். சர்வதேச அளவில் 65-வது இடத்தைப் பிடித்துள்ள ஷாருக் கான் ரூ. 245  கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஜுன் 1, 2016 முதல் ஜுன் 1, 2017 வரையிலான வருவாய் கணக்கிடப்பட்டுள்ளது. படச் சம்பளம் மற்றும் விளம்பர வருவாய் என ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தின் கணக்கீடு இதுவாகும். ஜோகோவிச், டைகர் வுட்ஸ், ரியானா, பிரிட்னி ஸ்பியஸ் போன்ற பிரபலங்களை விடவும் அதிக வருவாய் ஈட்டியுள்ளார் ஷாருக் கான். 

இவரை விடவும் சிறிது குறைவாக அதாவது ரூ. 238 வருவாய் ஈட்டியுள்ள சல்மான் கான், இந்தப் பட்டியலில் 71-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரூ. 228 கோடியுடன் அக்‌ஷய் குமார் 80-வது இடத்தில் உள்ளார். 

இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற இந்திய நடிகைகள் யாரும் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.