நடிகை திவ்யா உன்னி மறுமணம் செய்தார்!

மும்பையைச் சேர்ந்த கேரள இளைஞரும் சாஃப்ட்வேர் என்ஜினியருமான அருண் குமார் மணிகண்டனை...
நடிகை திவ்யா உன்னி மறுமணம் செய்தார்!
Updated on
1 min read

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகை திவ்யா உன்னி மறுமணம் செய்துள்ளார். 

மும்பையைச் சேர்ந்த கேரள இளைஞரும் சாஃப்ட்வேர் என்ஜினியருமான அருண் குமார் மணிகண்டனை, அமெரிக்காவின் ஹுஸ்டனில் திருமணம் செய்துகொண்டார் திவ்யா உன்னி. அருண் குமார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். நான்கு வருடங்களாக ஹுஸ்டனில் வசித்து வருகிறார். 

2002-ல் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் சுதிர் சேகரனைத் திருமணம் செய்தார் திவ்யா உன்னி. இவர்களுக்கு அர்ஜூன், மீனாட்சி என இரு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் 2016-ம் ஆண்டு சுதிர் சேகரனை திவ்யா விவாகரத்து செய்தார். இதையடுத்து தற்போது நடனக் கலைஞராக உள்ள திவ்யா உன்னி, மறுமணம் செய்துள்ளார். இத்தகவலை அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2013-க்குப் பிறகு திவ்யா உன்னி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com