

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை தமன்னா இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 20 கடைகளும், 19 தூண்களும் சேதமடைந்தன. கோயிலில் நடைபெற்ற விபத்து தொடர்பாக தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தீ அணைக்கப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட வெப்பத் தாக்கத்தை குறைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனினும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வழக்கம்போல அனுமதிக்கப்படுகிறார்கள்.
சீனு ராமசாமி இயக்கி வரும் கண்ணே கலைமானே படப்பிடிப்புக்காக மதுரை வந்துள்ள நடிகை தமன்னா இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.