பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பாகுபலி படத்துக்காக அண்ணா பல்கலைக்கழக வேலையை ராஜிநாமா செய்தேன்: மதன் கார்க்கி

பாகுபலி படத்தில் இடம்பெறுவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் வகித்த ஆசிரியர் (உதவிப் பேராசிரியர்) பணியை...

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:16 pm

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி’. இரு பாகங்களாக வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதன் தமிழ்ப் பதிப்புக்கு பாடாலாசிரியர் மதன் கார்க்கி வசனம் எழுதினார்.

இந்நிலையில் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம், TechofesAwards2018 என்றொரு விருது நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இந்நிகழ்வில் சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை பாகுபலி படத்துக்காக மதன் கார்க்கி பெற்றார். பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பாகுபலி படத்தில் இடம்பெறுவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் வகித்த ஆசிரியர் (உதவிப் பேராசிரியர்) பணியை ராஜிநாமா செய்தேன். பாகுபலி படத்துக்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை TechofesAwards2018 நிகழ்வில் பெற்றது உணர்வுபூர்வமான தருணம். ராஜமெளலி, ஷோபு, கீரவாணி மற்றும் படக்குழுவினருக்கு மிக்க நன்றிகள். மறக்கமுடியாத பயணம் அது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.