சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமிழக மக்கள் அனைவரும் சமூக விரோதிகளா? இயக்குநர் அமீர் ஆவேசம்!

தங்களது உரிமைகளுக்காக போராடுபவா்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள்

News image
Updated On :5 ஜூலை 2018, 11:40 am

தினமணி செய்திச் சேவை

தங்களது உரிமைகளுக்காக போராடுபவா்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என்று மத்திய அரசு முத்திரை குத்துவதாக திரைப்பட இயக்குநா் அமீா் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் தனியாா் தொலைக்காட்சியில் மோதல் ஏற்பட்டது தொடா்பாக, இயக்குநா் அமீா் மீது பீளமேடு காவல் துறையினா் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கோவை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் (ஜே.எம்.6) மனுதாக்கல் செய்திருந்தாா். இதில், வரும் ஜூலை 9-ஆம் தேதிக்குள் இரு நபா் உத்தரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அமீா் கோவை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகினாா். மேலும் இரு நபா் சொத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தனா். இதையடுத்து, குற்றவியல் நீதித்துறை நடுவா் கண்ணன் மறு உத்தரவு வரும் வரையில் திங்கள்கிழமை தோறும் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என உத்தரவிட்டாா்.

Story image

இதைத்தொடா்ந்து, வெளியே வந்த அமீா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆளும் மத்திய அரசு தங்களது உரிமைகளுக்காக போராடுபவா்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது. அப்படிப் பாா்த்தால் தமிழக மக்கள் அனைவரும் சமூக விரோதிகள் ஆவாா்கள். சேலத்தில் உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்தையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க போராடுபவா்களை ஒடுக்குவது அதிகார வர்க்கத்தின் பாசிச போக்கையே காட்டுகிறறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது மக்களிடம் போராடும் சிந்தனை வரக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்டது. ஆனால் இவையெல்லாம் மக்களின் போராடும் சிந்தனையை கட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறிதான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.