ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

உலக நாயகனுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார்! 

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ்

Published On :

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல். இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவர உள்ளது.

'விஸ்வரூபம் 2' படம் வெளியாகவுள்ள அதே சமயத்தில், ஆகஸ்ட் 10-ம் தேதி நயன்தாரா நடித்துள்ள 'கோலமாவு கோகிலா'வும் வெளியாகவிருக்கிறது. கோகோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கமலின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளிவரும் படமாக ‘விஸ்வரூபம் 2' உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் அதிகளவில் இப்படம் உள்ளது. போலவே 'கோலமாவு கோகிலா' படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் திரை ரசிகர்களுக்கு இந்தச் செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.