மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வருமான வரி வழக்கு: நடிகை த்ரிஷாவுக்கு அபராதம் இல்லை!

இதை ஆய்வு செய்த அதிகாரி, வருவாயை மறைத்து கணக்கு காண்பித்ததன் அடிப்படையில்...

News image
Updated On :15 ஜூன் 2018, 10:37 am

எழில்

நடிகை த்ரிஷா 2010-11 ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலின்போது, தொழில் ரீதியாக சிலரிடம் பெற்ற முன் பணத்தை வருவாயாகச் சேர்க்காமல் தனது வருமானம் ரூ. 89.69 லட்சம் எனச் சமர்ப்பித்தார். 

பின்னர், வருமான வரித் துறை அதிகாரிகள் அவருடைய வருமானம் தொடர்பான ஆய்வை தொடங்கிய பின்னர், திருத்தப்பட்ட வருமான விவரங்களை த்ரிஷா தாக்கல் செய்தார். அதில், தான் பெற்ற முன் பணத்தையும், வருவாயாகச் சேர்த்துக் காண்பித்திருந்தார் (வருமானமாக ரூ. 4.41 கோடி). இதை ஆய்வு செய்த அதிகாரி, வருவாயை மறைத்து கணக்கு காண்பித்ததன் அடிப்படையில், வருமான வரிச் சட்டம் 271(1)சி-யின் கீழ் ரூ.1.16 கோடி அபராதம் விதித்தார். 

இந்தச் சட்டப் பிரிவின் கீழ், இவ்வாறு வருவாயை மறைத்து கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு 100 முதல் 300 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடியும். இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீடு ஆணையரிடம் நடிகை த்ரிஷா முறையீடு செய்தார். இதை விசாரித்த ஆணையர், த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்தார்.

ஆணையரின் இந்த முடிவை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வருமான வரித் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தீர்ப்பாயமும் மேல்முறையீடு ஆணையரின் முடிவையே உறுதி செய்தது. இதை எதிர்த்து வருமான வரித் துறை ஆணையர் (மத்திய வட்டம்) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருமானத்தை மறைத்ததாக நடிகை த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட ரூ. 1.16 கோடி அபராதத்தை ரத்து செய்த உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்து வருமான வரித் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.