அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்தப் படத்தில் அர்ஜுன் ரெட்டி கதாநாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார்.
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜுன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ள படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.
இந்நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கும் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகவுள்ளார் விஜய் தேவரகொண்டா. ஆனந்த் சங்கர் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. இந்தப் படத்துக்கு நோட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்தப் படத்தில் மெஹ்ரீன் கதாநாயகியாக நடிக்கிறார்.