மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள நடிகர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன...

News image
Updated On :4 மே 2018, 10:40 am

எழில்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு ஒதுக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு (நீட்) மையங்களை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதியாக தெரிவித்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'நீட் தேர்வு நடைபெற குறைந்த கால அவகாசமே உள்ளதால், தேர்வு மையங்களை திடீரென மாற்ற முடியாது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், நிகழாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையங்களை திடீரென மாற்றினால் மாணவர்கள் குழப்பமடைவர். எனவே, தேர்வு மையங்களை மாற்றத் தேவையில்லை. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே சமயம், தமிழக மாணவர்கள் அடுத்த ஆண்டில் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவ நடிகர்கள் பிரசனா, அருள்நிதி ஆகியோர் முன்வந்துள்ளார்கள். 

நடிகர் அருள்நிதி ட்விட்டரில் கூறியதாவது: நானும் அக்ஸஸ் ஃபிலிமும் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதவுள்ள 20 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கத் தயார். தொடர்புக்கு - 9841777077 என்று கூறியுள்ளார்.

நடிகர் பிரச்சன்னா ட்விட்டரில் கூறியதாவது: நீட் தேர்வு எழுதவுள்ள 2 ஏழை மாணவர்களுக்கு அல்லது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பயணச் செலவுகளை நான் அளிக்கவுள்ளேன். இதுகுறித்த தகவல்களை எனக்கு அனுப்புங்கள். நான் பயணத்துக்கான டிக்கெட்டைப் பதிவு செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்ததாவது: நீட் பாலக்காடு , எர்ணாகுளம் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் வாட்ஸப்-பில் அனுப்பவும் . தொடர்புக்கு - கஸ்தூரி, ஜெய் 9789895953.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.