நடிகர் சிவகார்த்திகேயன் கவிஞர் சிவ கார்த்திகேயன் ஆகிறார்!

தற்போது கோலிவுட்டை கலக்கும் செய்தி இதுதான். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள
நடிகர் சிவகார்த்திகேயன் கவிஞர் சிவ கார்த்திகேயன் ஆகிறார்!
Updated on
1 min read

தற்போது கோலிவுட்டை கலக்கும் செய்தி இதுதான். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள `கோலமாவு கோகிலா' படத்தில் கல்யாண வயசு எனத் தொடங்கும் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான இது, பாடல் மே 17- ம் தேதி வெளியாக உள்ளது.

`கோலமாவு கோகிலா' படத்தில் ஜாக்குலின் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப்படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. முதல் பாடலான ‘எதுவரையோ...’ என்ற விடியோ, கடந்த மார்ச் 8-ம் தேதி வெளியானது. விவேக் மற்றும் கெளதம் மேனன் இணைந்து இப்பாடலை எழுதினார்கள். பாடியவர் ஷான் ரோல்டன், இடையிடையே வரும் வசனங்களை கெளதம் மேனன் பேசியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது பாடலை எழுத சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பளித்துள்ளார் அனிருத். இருவரும் அமர்ந்து பாடல் வரிகளை பற்றி கலந்தாலோசிப்பது போன்ற ஒரு விடியோவை அனிருத் தன் முகநூலில் அண்மையில் வெளியிட்டார்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்தியேனின் அடுத்த படத்தில் நயன்தாராவுடன் இரண்டாம் முறையாக இணைகிறார். தற்போது நயன்தாராவுக்காக ஒரு பாடலை எழுதியிருப்பது மகிழ்ச்சி என கூறியிருக்கிறார் சிவா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com