ருட்யார்ட் கிப்ளிங், 1894-ல் தி ஜங்கிள் புக் என்கிற நூலை எழுதினார். இந்தியக் காடுகளில் வளரும் மெளக்லி என்கிற சிறுவனுக்கு விலங்குகளுடன் நேரும் அனுபவத்தை விளக்கும் அந்த நூல் மிகவும் கவனம் பெற்றது.
தி ஜங்கிள் புக் நூல் பலமுறை திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 2016-ல் வெளியான தி ஜங்கிள் புக் படம் உலகளவில் வசூலை அள்ளியது. ரூ. 6,571 கோடி வசூல் கிடைத்தது (966 மில்லியன் டாலர்). இந்நிலையில் கிப்ளிங் எழுதிய நூல், மெளக்லி என்கிற பெயரிலும் 3டி திரைப்படமாக வார்னர் பிராஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ளது. கிறிஸ்டியன் பேலே, ப்ரீதா பிண்டோ நடிப்பில் ஆண்டி செர்கிஸ் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அட்டகாசமான இந்த ட்ரெய்லருக்குச் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்தப் படம் அக்டோபர் 19 அன்று வெளிவரவுள்ளது.