அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் துபையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கூறியதாவது:
மலையாளத் திரையுலகில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. மீ டூ-வை ஓர் இயக்கமாக நீங்கள் எண்ணக்கூடாது. ஆர்வமிகுதியில் உருவானது அது. (மீ டூ புகார் அளிப்பது) ஃபேஷன் போல மாறியுள்ளது. அதுபோன்றவை எல்லாம் குறுகிய காலமே நீடிக்கும் என்று கூறியுள்ளார்.