சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் என்கிற பெயரையும் பெற்றார்...

News image
Updated On :5 செப்டம்பர் 2018, 7:17 am

ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண் சோறு, கோயில் யானை உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்.

மிமிக்ரி கலைஞராகப் புகழ்பெற்ற ராக்கெட் ராமநாதன், பிறகு திரைத்துறையிலும் நுழைந்தார். மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அதிகக் கவனம் பெற்றார். தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் என்கிற பெயரையும் பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகள் பெற்றவர்.

74 வயதான ராக்கெட் ராமநாதன், சமீபகாலமாக உடல்நலக்குறைவுடன் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு பானுமதி என்கிற மனைவியும் சாய்பாலா என்கிற மகளும் சாய் குருபாலாஜி என்கிற மகனும் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.