மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது.
நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதமே இந்தப் படம் வெளியாகவுள்ளதாக செய்தி ஒன்று வெளியானது. ஆனால் இத்தகவலை ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார். இத்தகவல் உண்மையல்ல என்று ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து திட்டமிட்டபடி தீபாவளியன்று விஜய் - அட்லியின் படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.