டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எனது குடியுரிமை விவகாரத்தைச் சர்ச்சையாக்குவதா?: நடிகர் அக்‌ஷய் குமார் வருத்தம்!

இந்தியா மீதான எனது பற்றை மற்றவர்களுக்கு நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று இத்தனை வருடங்களாக நான் எண்ணியதில்லை...

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:49 am

எழில்

மக்களவைத் தேர்தலில் நடிகர் அக்‌ஷய் குமார் வாக்களிக்காததால் அவருடைய நாட்டுப்பற்று குறித்துப் பலரும் கேள்வியெழுப்பினார்கள். வாக்குரிமை குறித்து அவர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டதால் அதை வைத்தும் சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்தார்கள். மேலும் அவருடைய குடியுரிமை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்குப் பதில் அளித்து ட்விட்டரில் அக்‌ஷய் குமார் கூறியதாவது:

என்னுடைய குடியுரிமை குறித்து எதிர்மறை உணர்வுகள் உருவாகியுள்ளது எனக்குப் புரியவில்லை. நான் கனடா நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பதை ஒருபோதும் மறைத்ததில்லை. நான் கடந்த 7 வருடங்களாக கனடா சென்றதில்லை என்பதும் உண்மையே. நான் இந்தியாவில் பணிபுரிகிறேன். என் எல்லா வரிகளையும் இங்குதான் செலுத்துகிறேன். இந்தியா மீதான எனது பற்றை மற்றவர்களுக்கு நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று இத்தனை வருடங்களாக நான் எண்ணியதில்லை. என்னுடைய குடியுரிமை பிரச்னை தேவையில்லாமல் சர்ச்சையாக்கப்படுகிறது. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அந்த விவகாரம் தனிப்பட்ட முறையிலானது, சட்டரீதியானது, அரசியல் அற்றது, அடுத்தவருக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாத ஒன்று. இந்தியா வலிமையான நாடாக வளர என்னாலான பங்களிப்பைத் தொடர்ந்து செய்வேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.