நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வெளியானது மகாமுனி டீஸர்! வாவ் சொல்ல வைத்த அட்டகாசமான விடியோ!

2011-ம் ஆண்டு வெளியான மெளன குரு படத்தை திரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

News image
Updated On :17 மே 2019, 4:09 pm IST

2011-ம் ஆண்டு வெளியான மெளன குரு படத்தை திரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இயக்குநர் சாந்தகுமாரின் முதல் படமது. அதன் பின் கிட்டத்தட்ட எட்டு ஆண்டு கழித்து தனது இரண்டாம் படத்தை இயக்கியுள்ளார் சாந்தகுமார். மகாமுனி என்ற வித்யாசமான தலைப்பிலேயே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார் இயக்குநர். ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

இப்படத்துக்கு எஸ்.எஸ் தமன் இசையமைக்க, அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஆர்யா இந்தப் படத்தில் மூன்று விதமான கெட்டப்புக்களில் வருகிறார். அவரது மனைவியாக இந்துஜா, மற்றும் இளம் பத்திரிகையாளராக மகிமா ஆகியோரின் புகைப்படங்கள் ஃபஸ்ட் லுக்காக வெளியாகி உள்ளன. இந்தப் புகைப்படங்களு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. 

நடிகர் ஆர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.