

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கும் இப்படத்துக்கு இசை - நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அமலா பால் இந்தப் படத்திலிருந்து விலகி விட்டதால் அந்தக் கதாபாத்திரத்துக்கு மேகா ஆகாஷ் தேர்வானார். இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற தலைப்பை விஜய் சேதுபதி தான் தேர்வு செய்தார். இந்தப் படத்தின் கதைக்கு அது மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.