உங்கள் மகிழ்ச்சிக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன்: நடிகை சமந்தா உருக்கம்

ஒவ்வொரு நாளும் உங்களுடைய மகிழ்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்...
உங்கள் மகிழ்ச்சிக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன்: நடிகை சமந்தா உருக்கம்
Updated on
1 min read

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தனது 33-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.  

இந்நிலையில் நடிகை சமந்தா, தன் காதல் கணவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததாவது:

என்னுடைய சைதன்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். ஒவ்வொரு நாளும் உங்களுடைய மகிழ்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொரு நாளும் சிறந்த குணங்களை வெளிப்படுத்தும் உங்களைக் கண்டு பெருமைப்படுகிறேன். நாம் வலுவான கூட்டணியாக உள்ளோம். ஐ லவ் யூ டார்லிங் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை 2017 அக்டோபரில் திருமணம் செய்துகொண்டார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறினார்கள். இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com