காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

‘கோமாளி’ பட இயக்குநருக்கு ஹோண்டா சிட்டி காரைப் பரிசளித்த தயாரிப்பாளர்!

சூப்பர் ஹிட் படத்தை இயக்கி, பெரிய லாபத்தை அளித்ததால் கோமாளி படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு...

Published On :

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியால் படத்தின் டிரெய்லர் அதிகக் கவனத்துக்கு ஆளானது. படம் வெளியான முதல் நாளிலிருந்து கோமாளி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளார். 5-வது வாரத்தில் தமிழகம் முழுக்க 125 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்ததே மக்கள் அளித்த வரவேற்புக்குச் சாட்சி. இந்த வருடம் வெளியான படங்களில் பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்ததாக சூப்பர் ஹிட் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது கோமாளி.

இந்நிலையில் சூப்பர் ஹிட் படத்தை இயக்கி, பெரிய லாபத்தை அளித்ததால் கோமாளி படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹோண்டா சிட்டி காரைப் பரிசாக அளித்துள்ளார். ஜெயம் ரவி முன்னிலையில் காரின் சாவியை இயக்குநரிடம் வழங்கினார் ஐசரி கணேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.