அஜித் வீட்டில் சோதனை நடக்கவில்லை: வனத்துறை தரப்பில் விளக்கம்

அஜித் வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை. அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக...
அஜித் வீட்டில் சோதனை நடக்கவில்லை: வனத்துறை தரப்பில் விளக்கம்
Published on
Updated on
1 min read

நடிகர் அஜித்தின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக வெளியான தகவலையடுத்து, சென்னை திருவான்மியூரில் உள்ள அஜித்துக்குச் சொந்தமான வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அஜித்தின் வீட்டுக்கு சென்று சுரேஷ் சந்திரா குறித்து விசாரித்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பு குறித்தும் சோதனை செய்ததாக வெளியான செய்தியால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வனத்துறை தரப்பில் இந்தத் தகவல் பொய்யானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை. அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா, மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாகத் தகவல் வந்தது. ஆனால் அதுபற்றி வழக்குப் பதிவோ விசாரணையோ செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com