வாக்களிக்க இயலவில்லை: ரஜினிகாந்த்

தபால் வாக்குச் சீட்டு குறிப்பிட்ட நேரத்தில் வந்து  சேராத காரணத்தால் தன்னால் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். 
வாக்களிக்க இயலவில்லை: ரஜினிகாந்த்

தபால் வாக்குச் சீட்டு குறிப்பிட்ட நேரத்தில் வந்து  சேராத காரணத்தால் தன்னால் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. ஏற்கெனவே திட்டமிட்ட படப்பிடிப்பில் வெளி மாநிலங்களில் உள்ள நடிகர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தபால் வாக்கு சீட்டுக்கள் அனுப்பட்டு வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த், "தர்பார்' படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் தங்கி நடித்து வருகிறார். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ள செய்தி: 

தற்போது படப்பிடிப்புக்காக மும்பையில் தங்கியிருக்கிறேன். எனது தபால் வாக்கு சனிக்கிழமை (ஜூன் 22) மாலை 6.45 மணியளவில்தான் வந்து சேர்ந்தது. இதனால், இந்தத் தேர்தலில் என்னால் வாக்களிக்க இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது சற்றும் எதிர்பாராதது. இதுபோல் நடந்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com