மணி ரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களுக்கு எதிராக பிகார் மாநில போலீஸாரால் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மணி ரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து பிரதமர் மோடிக்குக் கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதினார்கள்.
இந்நிலையில், பீகாரின் முசாஃபர்பூரில் மணி ரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் இவர்களுக்கு எதிராக முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பிரதமரின் செயல்திறனுக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. அவர் அளித்த மனுவின் அடிப்படையில் 49 பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிபதி சூர்யகாந்த் திவாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து இந்தப் பிரபலங்கள் மீது முசாபர்பூரில் உள்ள சதார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது தேசத்துரோகம், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


