திரெளபதியின் கோணத்தில் மகாபாரதக் கதையைத் திரைப்படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பிரபல நடிகை தீபிகா படுகோன்.
மது மண்டேனாவுடன் இணைந்து 33 வயது தீபிகா படுகோன் தயாரிக்கும் மகாபாரத் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. மகாபாரதத்தின் வாழ்க்கைப் பாடங்கள் எல்லாம் ஆண்களின் கோணத்தில் தான் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் படத்தில் புதிய கோணத்தில் சொல்ல முயல்கிறோம் என்கிறார் தீபிகா படுகோன். திரெளபதி வேடத்தில் தீபிகா நடிப்பதால் இப்போதே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பல பாகங்களாக எடுக்கப்படும் இந்தப் படத்தின் முதல் பாகம் 2021 தீபாவளியின்போது வெளிவரவுள்ளது.