மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுசாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரிய நடிகை ரியாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 5:59 am

DIN

பிகாரில் பதிவு செய்யப்பட்ட நடிகர் சுசாந்த் சிங் மரண வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரிய நடிகை ரியாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சுசாந்த் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தனது மும்பை இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். இந்த வழக்கை மும்பை போலீஸாா் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது பிகாா் தலைநகா் பாட்னாவில் சுசாந்த் சிங்கின் தந்தை புகாா் அளித்திருந்தாா்.

சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.15 கோடி பணத்தை ரியாவின் குடும்பத்தினா் தவறாகக் கையாண்டதாகவும் அவா் குற்றம்சாட்டினாா். இதன் அடிப்படையில் பண பரிவா்த்தனை மோசடி வழக்கை அமலாக்கத் துறையினா் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பாட்னா போலீஸாா் விசாரித்து வந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ புதிதாக வழக்குப் பதிவு செய்து சிலரை குற்றம்சாட்டப்பட்டவா்களாக சோ்த்துள்ளது.

சுசாந்த் சிங் தற்கொலை தொடா்பாக பிகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா மனு தாக்கல் செய்திருந்தாா். 

இந்நிலையில் ரியா மனு மீது தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. பிகாரில் பதிவு செய்யப்பட்ட சுசாந்த் சிங் மரண வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரிய ரியாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுசாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறை இதுவரை சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.