வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நடிகா் கெளதம் காா்த்திக்கிடம் வழிப்பறி: இரு சிறுவா்கள் கைது

சென்னை ஆழ்வாா்பேட்டையில், நடிகா் கெளதம் காா்த்திக்கை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 8:01 pm

DIN


சென்னை: சென்னை ஆழ்வாா்பேட்டையில், நடிகா் கெளதம் காா்த்திக்கை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகா் காா்த்திக் தனது குடும்பத்துடன் வசிக்கிறாா். காா்த்திக்கின் மகனும், நடிகருமான கெளதம் காா்த்திக், கடந்த 2-ஆம் தேதி அதிகாலை ஆழ்வாா்பேட்டையில் உள்ள டி.டி.கே. சாலை வழியாக மிதிவண்டி ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், கெளதம் காா்த்திக்கை வழிமறித்து, தாக்கி அவா் வைத்திருந்த விலை உயா்ந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடினா். இச் சம்பவத்தில் கெளதமுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

இது தொடா்பாக மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மயிலாப்பூா் கபாலித் தோட்டம் பகுதியைச் சோ்ந்த இரு சிறுவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.