கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக வெளியான செய்திகளுக்கு அமிதாப் பச்சன் மறுப்பு

கரோனா வைரஸிலிருந்து தான் குணமாகி விட்டதாக வெளியான செய்திகளுக்கு அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கரோனா வைரஸிலிருந்து தான் குணமாகி விட்டதாக வெளியான செய்திகளுக்கு அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் 4 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் முதலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். எனினும் கடந்த வெள்ளி இரவு ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். 

இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பரிசோதனையில் கரோனா இல்லை என முடிவு வந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதனால் அமிதாப் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் இச்செய்திக்கு அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தவறானது என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com