மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக வெளியான செய்திகளுக்கு அமிதாப் பச்சன் மறுப்பு

கரோனா வைரஸிலிருந்து தான் குணமாகி விட்டதாக வெளியான செய்திகளுக்கு அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூலை 2020, 6:20 pm IST

கரோனா வைரஸிலிருந்து தான் குணமாகி விட்டதாக வெளியான செய்திகளுக்கு அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் 4 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் முதலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். எனினும் கடந்த வெள்ளி இரவு ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். 

இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பரிசோதனையில் கரோனா இல்லை என முடிவு வந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதனால் அமிதாப் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் இச்செய்திக்கு அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தவறானது என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.