கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேனா?: நடிகர் ராதாரவி விளக்கம்

கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு...
கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேனா?: நடிகர் ராதாரவி விளக்கம்
Published on
Updated on
1 min read

சென்னையிலிருந்து கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்குக் குடும்பத்துடன் சென்றார் ராதாரவி. அனுமதி பெற்று வந்திருந்தாலும் கரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு வந்திருப்பதால் நகராட்சி சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலின்படி எம்.கைகாட்டியில் உள்ள வீட்டில் 14 நாள்களுக்கு ராதாரவியும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அடையாள வில்லையை நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அவரது பங்களாவின் சுவரில் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராதாரவியின் குடும்பத்தினருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தச் செய்தியை மறுத்துள்ளார் ராதாரவி. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com